72 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனி சார்ந்த பச்சையம்மாள் 72 இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் தனது கணவருடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் மதுபோதையில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் கையை கட்டி , வாய் பொத்தி தாக்கினார்.

இதில் மூதாட்டி கை முறிவு ஏற்பட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் உடல் குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர்  மூதாட்டியை சத்திய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு   மருத்துவர்களின் பரிந்துரையால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் மது ஆசாமிகளை தேடி வருகின்றனர்

author avatar
murugan