யூடூபில் பிராங்க் ஷோ செய்ததற்காக 7 இளைஞர்கள் கைது..!

பெங்களூரை சேர்ந்த 7 இளைஞர்கள் யூடுபில் பிராங்க் ஷோ செய்தற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர் .
சமீபகாலமாக யூடுப் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது பொழுதுபோக்குக்காக செய்தாலும் சில பிரெச்சனைகளில் கொண்டு  போய் விட்டுவிடுகிறது .இந்த பிராங்க் ஷோவால் பெங்களூருவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பேய் வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்லபவர்களை பயமுறுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது .
அதில் அவர்கள் பேய் வேடமிட்டு ஆட்டோவை வழிமறிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் பயந்து ஆட்டோவை திருப்புகிறார் இந்த நிகழ்வு பல கண்டங்களுக்கு உள்ளானது .இந்நிலையில் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பொதுஇடத்தில் வைத்து தொந்தரவு செய்ததற்க்காக பெங்களூர் காவல்துறையினர் அவர்களை 4 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர் .

author avatar
Dinasuvadu desk