பாபநாசம் பட பாணியில் நடந்த சம்பவம்..! 7 வருடம் பிறகு போலீசாரிடம் சிக்கிய குடும்பம்..!

பாபநாசம் பட பாணியில் நடந்த சம்பவம்..! 7 வருடம் பிறகு போலீசாரிடம் சிக்கிய குடும்பம்..!

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே மன்னர் (39). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காணவில்லை என அவரது மனைவி மேரி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருநெல்வேலி குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வு துறைக்கு வழக்கு விசாரிக்க அனுப்பப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மன்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ப்பதற்காக சென்று உள்ளார்.அப்போது பன்னீர்செல்வம் என்பவர் தனது தோட்டத்தில் விலங்குகள் வராமல் இருக்க மின்வேலி அமைத்து உள்ளார். அதில் சிக்கி மன்னர் உயிர் இறந்து உள்ளார்.

இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் ,அவரது மனைவி பாப்பா மருமகன் பாலகுரு ஆகியோர் தங்களது  தோட்டத்தில் மன்னர் உடலை புதைத்து உள்ளனர்.பின்னர் ஊரில் நல்லவர்கள் போல நாடகம் ஆடியது தெரியவந்து.

இந்நிலையில் கடந்த ஆண்டுதான் பன்னீர்செல்வம் உடல் நிலை சரியில்லாமல் இறந்து உள்ளார்.இதனால் போலீசார் பாப்பா மற்றும்  மருமகன் பாலகுரு இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube