தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா.! பலி 81 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,760  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 364 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 234 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா கண்டறியப்பட்ட 536 பேரில் 46 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள். இதையடுத்து, இன்று மட்டும் 11,121 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,37,841 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 536 பேரில் ஆண்கள் 304 பேர், பெண்கள் 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,760 பேரில் ஆண்கள் 7,647 பேரும், பெண்கள் 4,110 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,270 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்