குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் -அமித் ஷா தகவல்

  • குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சுமார்  52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து உள்ளதாக என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இவர் இதற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று பாஜக சார்பாக மிஸ்ட் கால் சேவை வெளியிடப்பட்டது.அதாவது இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்புவோர் மிஸ்ட் கால் தரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து கூறுகையில்,சுமார்  52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தினமும் வீடு வீடாகச் சென்று பிராசார நோட்டீஸ்களை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.