கொரோனாவால் உலகளவில் 5,080 பேர் உயிரிழப்பு…1,37,702 பேர் பாதிப்பு .

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில்  தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ்  ஏற்படுத்தி உள்ளதும். கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் ,கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.

 இதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,080 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan