கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க  500 ரயில் பெட்டிகள் – அமித் ஷா

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க  500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.எனவே டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்நிலையில்  டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததால் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.தனியார் மருத்துவமனைகளில் 60% படுக்கைகள் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.