தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமன அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பனி நியமன அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 754 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை உதவி மருத்துவர்களாக பதவி ஏற்கக்கூடிய மருத்துவர்களுக்கு 11 மாதங்களுக்கு 40,000 தொகுப்பூதியமாக வழங்கி நியமனம் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரையும் ஒரே தேதியில் பணி நியமனம் செய்து பணி வழங்க மருத்துவ பணிகள் துறைக்கு அனுமதி அளித்திருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்ச்சி பட்டியலும் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal