டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!

டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் 47 ஆம் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 47 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. துபாயில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமான போட்டியாக அமைவதால், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹைதராபாத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

விளையாடும் வீரர்களின் விபரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன்), கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன்.

டெல்லி கேபிட்டல்ஸ்:

அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே.

Join our channel google news Youtube