வளைகாப்பு நடந்த சில நாள்களில் தூக்கில் தொங்கிய 5 மாத கர்ப்பிணி .!

  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்ராஜ் , ஜெயஸ்ரீ திருமணம் செய்து கொண்டனர்.
  • வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீக்கு தங்க விலையில் போட சொல்லி உள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் தங்க வளையல் போடவில்லை.

கடலூர் மாவட்டம் அக்ராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அப்பகுதியில் உள்ள அருண்ராஜ் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அருண்ராஜ் , ஜெயஸ்ரீ இருவரும் வீட்டின் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஜெயஸ்ரீ 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்.அப்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து அருண்ராஜ் வீட்டினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீக்கு தங்க விலையில் போட சொல்லி கூறியுள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் தங்க வளையல் போடவில்லை.

இதனால் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும், அருண்ராஜ் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.இந்த தகராறில் ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானம் ஆகி உள்ளனர்.இதையெடுத்து ஜெயஸ்ரீ அழைத்துக் கொண்டு அருண்ராஜ் புதுச்சேரி வந்து உள்ளனர். புதுச்சேரி வந்த சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அருண்ராஜ்  குடும்பத்தினர் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு கூறி உள்ளனர்.

ஜெயஸ்ரீயின் தாய் விஜயா தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan