சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசளித்த பார்த்திபன்!

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, இதனை தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து மக்களுக்கு வழங்குவதற்காக 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசாக அளித்துள்ளார். அந்த கேனில், ‘மலர் கொத்தாய் மனமே திகழ்வதால், நல்வாழ்வை காக்கும் கரங்களுக்கு – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.’ என எழுதியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.