சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்  தெரிவித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது  என்று தெரிவித்தார்.