5ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் – சிறிசேனா அறிவிப்பு…!!

5ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் – சிறிசேனா அறிவிப்பு…!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி என, இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்து விட்டார். இதனால் அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே, ராபக்சவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு இலங்கை நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவி வழங்க, அதிபர் சிறிசேனா தயாராக இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *