பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு படுகாயத்துடன் உயிர் தப்பினார்..!

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு படுகாயத்துடன் உயிர் தப்பினார்..!

கொலை முயற்சியில் இருந்து இன்று உயிர் தப்பிய பாகிஸ்தான் உள்துறை மந்திரி அஹ்சன் இக்பால் துப்பாக்கிச் சூடு காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அஹ்சன் இக்பால்(59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், இன்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது, ஒரு வாலிபர் அவரை நோக்கு துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அஹ்சன் இக்பாலின் வலதுகை தோள்பட்டயை பதம் பார்த்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காயமடைந்த அஹ்சன் இக்பால் நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *