இத்தாலியில் ஒரே நாளில் 429 பேர் பலி.. 5300 பேர் பாதிப்பு..!

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோன வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் சீனாவை தொடர்ந்து, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 5322 பேர் பாதிக்கப்பட்டு, 429 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 46,357 பேர் பாதிக்கப்பட்டு, 3,836 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். 

இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்க, அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல விதிகளை வித்திட்டுள்ளது. மேலும், அவசர தேவைகளை தவிர்த்து எக்காரணதிற்கும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.