மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

வேலூரில் மக்களவை தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் வேலூரில் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகம் போட்டியிடுகிறார்.முதலமைச்சர் பழனிசாமி கூட்டணிக் கட்சி வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் வேலூரில் மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் தம்பி பெருமாள், உறவினர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பையாஸ் அகமது உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

Join our channel google news Youtube