காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !

காஷ்மீர் : ரம்பன் மாவட்டம் படோடே என்ற இடத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத கூட்டத்திற்கும் இடையே கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளது தெறிவந்துள்ளது. எனவே, போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் நடத்திவருகின்றனர்.

author avatar
Vidhusan