ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட  பனிச்சரிவில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்பொழுது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.