புல்வாமாவில் மீண்டும் சோகம்!!4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!!

புல்வாமாவில் மீண்டும் சோகம்!!4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!!

புல்வாமாவின் பிங்லான் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குல்: 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

Image result for காஷ்மீர்

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  புல்வாமாவில் ராணுவ வீரர்கள் – தீவிரவாதிகள் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 பேரில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *