4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்

4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.  

தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை நாட்களான  27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெறப்படவில்லை.இந்நிலையில் இன்று  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

 

Leave a Comment