சிறுமியை பலாத்காரம் செய்த ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை..!

  • 16 வயது சிறுமி நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் போலீஸ் குடியிருப்பிருக்கு கடத்தி சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
  • சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக  கூறி காரில்  ஏற்றிக்கொண்டு போலீஸ் குடியிருப்பில் சென்று அங்கு அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியை அவர் வீட்டின் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர்  அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜிதேந்திர உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
murugan