பாஜகவில் இணைந்த 4 எம்.பி.க்கள்!தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு

பாஜகவில் இணைந்த 4 எம்.பி.க்கள்!தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ்,மோகன் ராவ்  ஆகிய 4 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் வழங்கினர்.அந்த 4 எம்.பி.க்களும் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த 4 எம்.பி-க்கள், பாஜகவில் இணைந்ததற்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம், தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு அளித்துள்ளது. தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் பாஜகவோடு இணைய, அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube