4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரவக்குறிச்சி – வி.வி. செந்தில்நாதன்
  • ஒட்டப்பிடாரம் -பெ. மோகன்
  • சூலூர் – வி.பி.கந்தசாமி
  • திருப்பரங்குன்றம் – எஸ். முனியாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Comment