ஆயுதபூஜையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் பயணம்

ஆயுதபூஜையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் பயணம்

ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த  ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது.
கடந்த  3-ஆம் தேதி சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு  நடைபெற்றது. இந்த நிலையில் ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர் . கடந்த மூன்று தினங்களில் 8 ,490 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
Join our channel google news Youtube