மனைவியுடன் சேர்ந்து 35 வயதான பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் ஆவார்.இவர் அவரின் மனைவியின் 35 வயதான ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.

மேலும் கணிணி தொழில்நுட்பத்தின் மூலம் அந்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக இருப்பது போன்று செய்து வாட்ஸ ஆப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.

இதனை அறிந்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது நரேந்திரனும் அவரது மனைவியும் அவரை தாக்கி இனிமேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதன் காரணமாக திருவண்ணாமலை மகளீர் காவல் துறையினரிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.இது குறித்து காவல் துறையினர் நரேந்திரனின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் தப்பி ஓடிய அவரின் மனைவியை தேடிவருகின்றனர்.