மராத்வாடாவில் 6 மாதங்களில் 310 விவசாயிகள் தற்கொலை!

மராத்வாடாவில் 6 மாதங்களில் 310 விவசாயிகள் தற்கொலை.

2020-ம் வருடம் தொடங்கி ஆறு மாதங்களில், மராத்வாடாவில் 310 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் இந்த இறப்பு எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் 413 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மராத்வாடாவில் வறட்சியின் காலமாக நீண்ட காலமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மோசமான மழை, பயிர் செயலிழப்பு மற்றும் கடன் போன்ற பிரச்சனையால், விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர்.

மராத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, பீட், உஸ்மானாபாத், நந்தேடு, லாதூர் மற்றும் ஹிங்கோலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என  விவசாய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.