3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றம்….!!

வருகின்ற மார்ச் மாதம் பாரளுமன்ற தேர்தல் நடைபெற்ற இருக்கின்றது.இந்நிலையில் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.  இதையடுத்து ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியை முடித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம்  உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் , தமிழகத்தில் ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யவேண்டுமென்றும் மாநில தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் இதன் அறிக்கையை வருகின்ற  ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment