பீகார் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை – பரிதவிக்க வைக்கும் குழந்தையின் புகைப்படம்!

பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 வயது குழந்தை உயிழந்த நிலையில் இருக்கும் புகைப்படம் அனைவரையும் பரிதவிக்க வைக்கிறது.

கடந்த மே மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் காரணமாக சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளை உயிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நீங்குவதற்குள் தற்போது கனமழை பெய்துவருகிறது.  இந்த இரு மாநிலங்களிலும் 30 மாவட்டத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா சரணாலயம் 90 % வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல். போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.2004ம் ஆண்டுக்கு பின் மிக மோசமான நிலைமையை இந்த மாநிலங்கள் சந்தித்துள்ளன. இதுவரை 26 தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.