அமிர்தசரஸ் சிறையிலிருந்து தப்பித்த 3 கைதிகள்.!

  • கடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகிய மூன்று பேரும் ஒரே சிறையில் இருந்து உள்ளனர்.
  • மூன்று பேரும் சுவரை துளையிட்டு தப்பி செல்ல திட்டமிட்டு  இதற்காக கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் சுவரின் செங்கலை உடைத்து வந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மத்திய சிறை உள்ளது.இங்கு ஏராளமான கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 7-வது பிரிவில் 61 கைதிகள் உள்ளனர். அதில் கடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதையெடுத்து மூன்று பேரும் சுவரை துளையிட்டு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் சுவரின் செங்கலை உடைத்து வந்துள்ளனர்.பின்னர் காலையில் மீண்டும் இருந்த மாதிரி செங்கற்களை வைத்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு சிறையில் இருந்து தப்பி உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 3 பேரையும் பிடிக்க மாநிலம் முழுவதும்  தேடுதல் வேட்டையில் நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk