தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது!

மத்திய உளவுத்துறை நேற்று தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கோவையில் சந்தேகத்தின் பெயரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளத.

கேரளாவிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியது தொடர்பாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.