தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை துவக்கம்…ஊர்..? நேரம்..?

தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.
1. சேலம் – கரூர் (வண்டி எண் : 76801/76802)
சேலத்தில் இருந்து பகல் 1:45 புறப்பட்டு, மாலை 3:25 சென்றைடயும். இதேபோல் கரூரில் இருந்து காலை 11:40 புறப்பட்டு, மதியம் 1:25 சென்றடையும்
2.கோயமுத்தூர் – பழனி (வண்டி எண் : 56608/56609)
கோவையில் இருந்து மதியம் 1:45 புறப்பட்டு, காலை 4:40 சென்றடையும். தேபோல் பழனியில் இருந்து காலை 10:45 புறப்பட்டு, மிதயம் 2:10 சென்றடையும்.
3. பொள்ளாச்சி – கோவை ( வண்டி எண் : 56184/56183)
பொள்ளாச்சியில் இருந்து காலை 7:30 புறப்பட்டு, காலை 8:40 சென்றடையும். இதேபோல் கோவையில் இருந்து அதிகாலை 5:45 புறப்பட்டு, காலை 7 சென்றடையும்.

author avatar
Vidhusan