தமிழகத்தில் அடுத்தடுத்து 3 கொரோனா கண்டறியும் ஆய்வகங்கள்.!

கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் சென்னை கிண்டி கிங் மையத்தில் முதலில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழத்தில் மேலும் கொரோனா கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டது. 

அதனடிப்படையில், மேலும் 9 அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க அனுமதியும், 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ஆய்வு சாதனங்களையும் அமைக்க அரசு அனுமதி அளித்தது.

தற்போது மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க அரசு அனுமதி  அளித்துள்ளது. இது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 2 தனியார் மருத்துவமனையிலும் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.