காஷ்மீர் கொடி பறந்தால் தான் இந்தியா கொடி பறக்கும்… மெஹபூபா கருத்து…

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மெஹபூபா கருத்து. பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர்கள் என கண்டனம்.

சமீபத்தில். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் நிருபர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னால் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஐ மீண்டும் அமல்படுத்தி காஷ்மீரின் கொடி பறக்க விடும் போதுதான் இந்திய தேசிய கொடியையும் இங்கு பறக்க விட முடியும் கூறினார். இந்த அவரது கருத்து அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்நிலை இவரது இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், பதவி இருக்கும் வரை நாட்டின் பெருமையை பேசிவிட்டு தற்போது நாட்டுக்கு எதிராக பேசும் இவரும், இவரை போன்ற தலைவர்களும் பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
Kaliraj