அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

  • அமெரிக்கா கடற்படை தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • துப்பாக்கி சூடு நடத்திய நபர்  சவுதி அரேபிய நாட்டை சேர்ந்தவர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் பாதுகாப்பு அதிகம் உள்ளது ஆகும்.பாதுகாப்பு மிகுந்த இந்த தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.அந்த நபர் அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.

அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த மர்மநபரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைத்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ததுப்பாக்கி சூட்டை நடத்திய நபர்  சவுதி அரேபிய இராணுவத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.