மஹாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் இருந்து சுமார் 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் என்னும் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவாகிய இதன் மையம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Rebekal