3 நாட்களில் மின் இணைப்பு….அமைச்சர் தங்கமணி தகவல்…!!

புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில்  அமைச்சர் தங்கமணி செய்தியார்களிடம் கூறியதாவது:
கஜா புயல் பாதித்த நகர்பகுதிகளுக்கு 2 தினங்களிலும், கிராமப்புறங்களுக்கு 3 அல்லது 4 தினங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும்.
நிவாரணப்பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1,000 பணியாளர்கள் நாளை வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும். முழுமையாக 5 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும்
புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் மின் இணைப்பு விரைவில் கிடைக்கும். மின்சீரமைப்பு பணிக்கு மின்கம்பங்கள் தயாராக உள்ளன. கூடுதலாக மின்மாற்றிகளும் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment