3வது முறையாக முதலமைச்சராகிறார் ஸோரம் தங்கா…!!

மிசோரம் முதலமைச்சராக ஸோரம் தங்கா நாளை மறுநாள் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் ஸோரம் தங்கா 3வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பிரிவினைவாதியாக அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி, ராணுவத்தால், கைது செய்யப்பட்ட ஸோரம் தங்கா, பின்னர் ஜனநாயக பாதைக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment