டெல்லி – ஆக்ரா இடையேயான சாலையில் கோர விபத்து – 29 பேர் பலி !

தலைநகர் டெல்லிக்கும் ஆக்ரா நகரத்திற்கும் இடைப்பட்ட எஸ்பிரஸ்வே என்னும் ஆறு வழிசாலையில் இன்று காலை பேருந்து ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதுல் பேருந்தில் பயணித்த பயணிகள் சுமார் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லி வரை வந்து கொண்டிருந்த பேருந்து 50 பயணிகள் வரை பயணித்தனர். பேருந்து இன்று காலை யமுனா எஸ்பிரஸ்வே என்னும் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து ஓட்டுநர் தூங்கியதால், சாலையில் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2012 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சாலையில் இதுவரை 900 க்கும் மேற்பட்டோர் விபத்தால் உயிர் இழந்துள்ளனர்.