பிரான்ஸ் நாட்டு தேவாலயத்தில் பயங்கரம்… தீவிரவாதி வெறிச்செயல்.. தலையை துண்டித்த கொடூரம்…

பிரான்ஸ் நாட்டு தேவாலயத்தில் பயங்கரம்… தீவிரவாதி வெறிச்செயல்.. தலையை துண்டித்த கொடூரம்…

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் பிரான்ஸ் நாடு நிலைகுலைந்து உள்ள நிலையில்  தற்போது அங்கு ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று அங்குள்ள நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான்.பின்,  அவன் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல் அதிரடி படையினர் அங்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால், அதற்குள் அவனது தாக்குதலில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அவன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோதும், காவல்துறையால் கைது செய்யப்பட்டபோதும் மத ரீதியிலான கோஷம் போட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. காவலர்கள் சுட்டதில் படுகாயம் அடைந்த பயங்கரவாதி, அங்குள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube