வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு !செப்டம்பர் 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் – திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு !செப்டம்பர் 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் – திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு

 மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தோழமை கட்சிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டம்  நடத்தப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube