பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் கொலை – பாகிஸ்தான் ராணுவம்.!

பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மீட்கப்பட்டன. ராணுவ அறிக்கையில் பயங்கரவாதிகளின் தொடர்பு பற்றிய தகவல்களை வழங்கவில்லை. நேற்று வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாத தளபதியையும் மற்ற மூன்று பயங்கரவாதிகளையும் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்