மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார்.
தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், பெரிய நடிகனாக ஆக வேண்டும் என எழுதியிருந்தேன். அது தற்போது நடந்து இருக்கிறது. நம் எண்ணங்கள் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.’ என பதிவிட்டு இருந்தார்.
இதற்க்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கண்டிப்பா ப்ரோ இது உண்மைதான்’ எனவும் கூறியுள்ளார்.
source : dinasuvadu.com