27, 28 இரு தினங்கள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை!

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று  அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமான சந்தைகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும் என்றும் நான்கு மற்றும் ஐந்து பேருக்கு மேல் கூடியிருந்தால் தண்டனை விதிக்கப்படும் என்றும் சில கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் இந்த கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal