26 மாவட்ட முடிவுகள் அறிவிப்பு :அதிக வெற்றி திமுகவிற்கா ? அதிமுகவிற்கா?

  • மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  
  • அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

இன்று தமிழகத்தில்  உள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் நடைபெற்றது.ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமுள்ள  26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ,அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

அதிமுக கைப்பற்றியுள்ள பகுதிகள்:

தூத்துக்குடி,கன்னியாகுமரி,ஈரோடு,அரியலூர்,திருப்பூர்,விருதுநகர்,தேனி,கோவை,நாமக்கல், தருமபுரி,கரூர்,புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கைப்பற்றியுள்ள பகுதிகள் : 

தஞ்சாவூர்,மதுரை,ராமநாதபுரம்,திருவாரூர், நீலகிரி,திருவள்ளூர், திண்டுக்கல்,திருவண்ணாமலை,நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ,திருச்சி,பெரம்பலூர் ஆகிய 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை  கைப்பற்றியுள்ளது.