25 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்த மாணவர்கள்- உள்ளே அனுமதிக்காத கடை ஊழியர்கள் !

நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி  கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம்