தமிழ்நாடு காவல்துறையில் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் வீரதீர செயல்கள் புரிந்ததாக இந்தியா முழுவதும் சிறந்த காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியரசு தலைவர்  விருதை சுதந்திர தினத்தன்று  வழங்கி கௌரவிப்பார்.

அந்த வகையில், தமிழகத்தில் வீரதீர செயல்கள் புரிந்தததற்காக  21 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் நேரடியாக சிறந்த காவலருக்காக தேர்ந்தெடுத்த 2 காவலர்களையும் சேர்த்து மொத்தம் 23  காவலர்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 71 பேரும், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 41 பேரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.