சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் வெங்காயம்..வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா?

  • மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
  • இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அவர்கள் விசாரிக்கையில்,  அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் இருந்து ஏற்றி வருவதாக அந்த லாரியின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மேலும், ஊறிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால், அந்த லாரி மற்றும் வெங்காயங்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.