தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,488 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 989 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,53,616 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.