21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்…..!!

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்…..!!

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புற்றுநோய் காரணமாக கடந்த 21-ம் தேதி உயிரிழந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல், புதுச்சேரியில் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதலமைச்சர் நாராயணசாமி, பிரபஞ்சனின் உடலுக்கு, தேசிய கொடியை போர்த்தி, மரியாதை செலுத்தினார். அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலர் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சன்னியாசிதோப்பு மயானத்தில், 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன், பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *