எதிர்பார்ப்புடைய புரோ கபடி இன்று முதல் துவக்கம் !

உலகக்கோப்பையில் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஐதராபாத்தில் இன்று (ஜூலை 20) தொடங்குகிறது. இன்று தொடங்கி அக்டோபர் 19 முடிகிறது. இந்த கபடி தொடர் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தாண்டு தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ் என 12 அணிகள் மோதுகிறது.

மும்பை, பாட்னா, ஆமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா என 12 இடங்களில் போட்டிகள் நடைப்பெறும்.இந்த சீசனில் நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் மற்றும் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணிகளும் பலம் வாய்ந்த அணியை கொண்டு களமிறங்க காத்துள்ளது.

12 அணிகள்: 

1.தமிழ் தலைவாஸ்
2. அரியானா ஸ்டீலர்ஸ்
3. தபாங் டெல்லி
4. ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்
5. பெங்கால் வாரியர்ஸ்
6. பெங்களூர் புல்ஸ்
7. தெலுங்கு டைடன்ஸ்
8. குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ்
9. உபி யோதா
10. பாட்னா பைரேட்ஸ்
11. யு மும்பா
12. புனேரி பல்தான்

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 11 அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

இன்றைய முதல் போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் இரவு 7.30 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உட்புற மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் பெங்களூர் புல்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகிறது.

author avatar
Vidhusan